Sunday, October 24, 2010

online tamil news

காந்தி கிராமத்திற்கு துணை ஜனாதிபதி வருகை

  • காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு துணை ஜனாதிபதி வருகைக்காக, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
  • திண்டுக்கல் மாவட்ட காந்திகிராம பல்கலையில், வரும் 28ல் பட்டமளிப்பு விழா நடக்கிறது. விழாவில் பல்கலை வேந்தரான, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி பங்கேற்கிறார். அன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வரும் அவர், அம்பாத்துரையில் உள்ள இறங்கு தளத்தில் இறங்கி அங்கிருந்து காரில் பல்கலை விருந்தினர் இல்லத்திற்கு வருகிறார்.
  • துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில நாட்களில், தேசிய பாதுகாப்பு படையினர், காந்தி கிராமத்திற்கு வருகின்றனர்.
  • இவர்கள், பல்கலை வளாகம் மற்றும் விழா நிகழ்விடம் ஆகியவற்றையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்வர். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் வந்து இறங்கும் ஒத்திகை நடைபெறவுள்ளது.

Tuesday, October 5, 2010

online tamil news

காமன்வெல்த்: இந்தியாவுக்கு 5 தங்கம்


  • காமன்வெல்த் போட்டியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. இதன்மூலம் மொத்தம் 11 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
  • மல்யுத்தம்: மல்யுத்தத்தில் 3 பிரிவுகளுக்கான போட்டிகள் அனைத்திலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. கிரேக்க ரோமன் 60 கிலோ, 74 கிலோ மற்றும் 96 கிலோ பிரிவு போட்டிகளில் ரவீந்தர் சிங், சஞ்சய் மற்றும் அனில் குமார் முறையே தங்கம் வென்று இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
  • துப்பாக்கிச் சுடுதல்: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா - ககன் நரங் ஜோடி தங்கம் வென்றதுடன் புதிய சாதனையும் படைத்தது. அதேபோல் மகளிர் பிரிவில் ரஹி சர்னோபட் மற்றும் அனிஷா சய்யத் ஜோடியும் புதிய சாதனையுடன் தங்கம் வென்றது. 

online tamil news

வேலைவாய்ப்பு பதிவு: புதுப்பிக்க கால நீட்டிப்பு
  • வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிப்பதற்கான காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  
  •  2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புத்துப்பித்தல் சலுகையும், 2009-ம் ஆண்டு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
  •  கம்ப்யூட்டர் வழியே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை ஒருங்கிணைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக அலுவலகத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நிறுத்தப்பட்டன.  எனவே, நிறுத்தப்பட்ட இந்தக் காலத்துக்கு ஈடாக வேலைவாய்ப்புப் பதிவினை திங்கள்கிழமை முதல் வரும் 19-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. 
  • பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு உரிய படிவத்தில் வேலைவாய்ப்புப் பதிவு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் முறையிலோ மனுச் செய்து பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று சந்தோஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Friday, October 1, 2010

online tamil news

பாரத ஸ்டேட் வங்கி சேவையில் அதிருப்தியா? இனி எஸ்எம்எஸ் உதவும்


  • பாரத ஸ்டேட் வங்கி சேவையில் அதிருப்தி ஏற்படும் நிலையில், குறையைப் போக்கும் "எஸ்எம்எஸ்' சேவை தொடங்கப்பட்டுள்ளது.  செல்பேசியில் 'UNHAPPY' என "டைப்' செய்து, "8008202020' என்ற எண்ணுக்கு சேவை குறைபாட்டை எஸ்எம்எஸ் செய்தால், அதிகாரிகள் உடனடியாக  வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு குறையைத் தீர்க்க உதவுவார்கள்.  
  • வாடிக்கையாளர்களின் குறையைத் தீர்க்கும் இத்தகைய முயற்சியை நாட்டிலேயே முதன்முறையாக பாரத ஸ்டேட் வங்கி தொடங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு

  • வேலூரில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.  
  • மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காது கேளாதோர், வாய் பேசாதோர், ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம். 17 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தப் பட்சம் 6-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 
  • உடல் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதில் பங்கேற்ற விரும்புவோர் தங்களது சுய விவரம், தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகம், ஆபிசர்ஸ் லைன், வேலூர் என்கிற முகவரிக்கு அக்டோபர் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

online tamil news

காமன்வெல்த் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு

  காமன்வெல்த் ஜோதிக்கு தில்லி தலைமைச் செயலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி லண்டனில் ராணி எலிசபெத்தால் தொடங்கி வைக்கப்பட்ட காமன்வெல்த் ஜோதி, உலகின் 71 நாடுகளில் பயணம் செய்து பாகிஸ்தானின் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தது.
 இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சென்ற இந்த ஜோதி, வியாழக்கிழமை தில்லி வந்தது. தில்லியின் பல்வேறு இடங்களுக்குச் சென்ற இந்த ஜோதி வெள்ளிக்கிழமை காலையில் தில்லி தலைமைச் செயலகம் வந்தது. அங்கு காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழு இணை இயக்குநரிடம் இருந்து ஜோதியை தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பெற்றுக்கொண்டார். ஜோதி தலைமைச் செயலகம் வந்தபோது ஷீலா தீட்சித் தலைமையிலான அமைச்சரவை சகாக்கள், எம்.எல்.ஏ.க்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் திரண்டிருந்து வரவேற்றனர்.   
இந்த ஜோதி சனிக்கிழமை தில்லியின் பல்வேறு பகுதிகளில் வலம் வரும். போட்டி தொடங்கும் ஞாயிற்றுக்கிழமையன்று தொடக்க விழா நடைபெறும் ஜவாஹர்லால் நேரு மைதானத்திற்கு வந்தடையும். அதன்பிறகு தொடக்க நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஜோதியை ஏந்திச் செல்வர்.