Tuesday, August 24, 2010

ஹைதராபாத் சர்வதேச மாநாட்டில் 12 வயது கணிதப் புலி

ஹைதராபாதில் நடைபெறும் சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து சாதனை படைத்துள்ளார்.  

ஹைதராபாதில் கடந்த 19-ல் துவங்கிய இந்த மாநாடு வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட கணித அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.  

இவர்களுக்கு மத்தியில் விளையாட்டாக சுற்றித் திரியும் 12 வயதுச் சிறுமி காவ்யா ஜெயராம், சில நாள்களுக்கு முன்பு "இன்டெகர் பார்ட்டிஷனிங்' (ஐசபஉஎஉத டஅதபஐபஐஞசஐசஎ) குறித்து தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தபோது கணிதவியல் ஜாம்பவான்கள் எல்லாரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர். 

  ஆனால், இதெல்லாம் சாதாரணம், காவ்யாவின் ஆய்வு முடிவுகள், சர்வதேச எண் கணித இதழில் ஏராளம் வெளிவந்துள்ளன என்று  கூறுகிறார்.    காவ்யாவின் குடும்பத்தினர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 

 ஐந்து வயதில் அவர் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டார். 7 வயதில் உயர் கல்வியை முடித்து விட்டார். இப்போது கல்லூரியில் படித்து வரும் காவ்யா, சிறு வயது முதல் கணக்கையே முழுநேர உணவாக உண்டு வாழ்கிறாள்.  "வீட்டில் அவருக்கு யாரும் எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை. 

  தாய்மொழியான தமிழில் காவ்யாவுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும். ஆனால், சரளமாகப் பேச வராது என்று கவலைப்படுகிறார் சுபத்ரா.  மலைமலையாக குவியும் பாராட்டுகளைக் கண்டுகொள்ளாமல் மான்குட்டியாகத் துள்ளித் திரியும் காவ்யா, மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்துகிறார்.   "குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை கணக்கு என்றால் ஏன் கசக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. 

  சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் படிக்க விரும்புவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவில் உள்ள பெர்க்கிலே அல்லது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.  கணிதம் மட்டுமன்றி இசையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறாள் காவ்யா.

No comments:

Post a Comment