அன்னை தெரசாவுக்கு அஞ்சல் தலை: அமெரிக்கா வெளியிடுகிறது
அன்னை தெரசாவை கெளரவிக்கும் வகையில் அமெரிக்க அஞ்சல் துறை அவருக்கு செப்டம்பர் 5-ம் தேதி அஞ்சல்தலை வெளியிடுகிறது.
மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 1979-ல் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவுக்கு அஞ்சல் தலைமூலம் பாராட்டு தெரிவிக்க உள்ளதாக அமெரிக்க அஞ்சல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட உள்ளது.கொலராடோவில் ஓவியர் தாமஸ் பிளாக்ஷிர் வரைந்த அன்னை தெரசாவின் உருவப்படம் இந்த அஞ்சல் தலையில் இடம்பெற்றிருக்கும்.
No comments:
Post a Comment