Monday, August 30, 2010

வேலை வாய்ப்பு செய்திகள்

   செப்டம்பர் 19-ல் பாதுகாப்பு சேவை தேர்வு      

              மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

              தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அனுமதி சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு அனுமதிக்கப்படாத மாணவர்களுக்கு அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு நிராகரிப்பு கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.எந்த ஒரு தகவலும் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், வேலை நாள்களில் மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணைத்தின் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.011-2307 4458 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ, 011-2334 7310 என்ற எண்ணுக்கு ஃபேக்ஸ் அனுப்பியோ தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

        தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்த விரிவான தகவல்கள் மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின்  ‌w‌w‌w.‌u‌p‌sc.‌g‌o‌v.‌i‌n ​  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

 

No comments:

Post a Comment