இரவில் மட்டும் கொலை-16 பேரைக் கொன்ற சைக்கோ நபர் கைது
ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் தனியாக இருக்கும் நபர்களைக் குறி வைத்துக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முன்பு சென்னை நகரில் இரவு நேரங்களில் தனியாக சிக்கும் நபர்கள் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்டு வந்தனர். அதைச் செய்தது யார் என்பது இன்று வரை சரியாகத் தெரியவில்லை. சில கொலைகள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் மர்மக் கொலைகள் குறித்த புதிர் இதுவரை விளங்கவில்லை.
இந்த நிலையில், ஹைதராபாத் நகரில் கடந்த 2 மாதமாக இரவில் தனியாக இருக்கும் நபர்கள் குறி வைத்து கொல்லப்பட்னர். அதுவும் அனைவரும் பாறாங்கல்லால் தாக்கி கொடூரமாகக கொல்லப்பட்டனர். மொத்தம் இதுவரை 16 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் ஹைதராபாத் நகரமே அல்லோகல்லப்பட்டுப் போனது. இரவில் தனியாக இருக்க அனைவரும் பயந்தனர்.
சம்பந்தப்பட்ட நபரைப் பிடிக்க போலீஸார் வலை வீசி காத்திருந்தனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சல்லமன்ட்லி பகுதியில் உள்ள ஏ.டி.எம். காவலாளி ஒருவர் பாறாங்கல் போட்டு கொல்லப்பட்டார். அப்போது அவரது செல்போன் திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் தனியார் செல்போன் நிறுவனம் உதவியுடன் அந்த நபரை கண்காணித்துப் பிடித்தனர். இதில் தொடர் கொலையில் ஈடுபட்டு வந்த அந்த வாலிபர் சிக்கினார்.
விசாரணையில் கர்நாடக மாநிலம் குல்பர்காவை சேர்ந்த ரத்தோட் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், ஹைதராபாத் நகரில் கடந்த 2 மாதமாக இரவில் தனியாக இருக்கும் நபர்கள் குறி வைத்து கொல்லப்பட்னர். அதுவும் அனைவரும் பாறாங்கல்லால் தாக்கி கொடூரமாகக கொல்லப்பட்டனர். மொத்தம் இதுவரை 16 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் ஹைதராபாத் நகரமே அல்லோகல்லப்பட்டுப் போனது. இரவில் தனியாக இருக்க அனைவரும் பயந்தனர்.
சம்பந்தப்பட்ட நபரைப் பிடிக்க போலீஸார் வலை வீசி காத்திருந்தனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சல்லமன்ட்லி பகுதியில் உள்ள ஏ.டி.எம். காவலாளி ஒருவர் பாறாங்கல் போட்டு கொல்லப்பட்டார். அப்போது அவரது செல்போன் திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் தனியார் செல்போன் நிறுவனம் உதவியுடன் அந்த நபரை கண்காணித்துப் பிடித்தனர். இதில் தொடர் கொலையில் ஈடுபட்டு வந்த அந்த வாலிபர் சிக்கினார்.
விசாரணையில் கர்நாடக மாநிலம் குல்பர்காவை சேர்ந்த ரத்தோட் என்பது தெரிய வந்தது.
No comments:
Post a Comment