உலகின் சக்திவாய்ந்த 3வது நாடாக இந்தியா உருவாகும்: அமெரிக்கா கணிப்பு
- 2025-ல் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் இந்தியா 3-வது இடம் வகிக்கும் என்று அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.
- இந்த கணிப்பில், முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் சீனாவும் இடம்பெற்றுள்ளன.
- அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் (என்ஐசி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் கூட்டாக வெளியிட்டுள்ள "உலக ஆளுகை 2025" என்ற அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், இந்த அறிக்கையின்படி, 2025-ல் கூட்டமைப்பு அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாமிடத்திலும், ஐரோப்பிய ஒன்றியம் மூன்றாமிடத்திலும், இந்தியா நான்காம் இடத்திலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment