Thursday, September 16, 2010

online tamil news

அரசு வேலைவாய்ப்பு கேட்டு ஜாட் இனத்தவர் போராட்டம்

அரியானாவில் "ஜாட்' சமூகத்தவருக்கு அரசு வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு கேட்டு நடைபெறும் போராட்டம் தொடரும் என, அகில இந்திய ஜாட் மகாசபை தலைவர் யஷ்பால் மாலிக் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு தொடர்பாக ஜாட் சமூகத்தவர் நடத்தி வந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பை ஜாட் மகாசபை தலைவர் யஷ்பால் மாலிக் மறுத்துள்ளார். 
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், "அரசு வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு கேட்டு நாங்கள் நடத்தும் போராட்டம் தொடரும். இந்த போராட்டம் ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெறும். ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்கள் போக்குவரத்தை தடை செய்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment