Tuesday, September 28, 2010

online tamil news

அயோத்தி வழக்கில் செப். 30-ல் தீர்ப்பு

        அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் வரும் 30-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறவுள்ளது.
          இத்தகவலை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பணி அதிகாரி ஹரி சங்கர் துபே தெரிவித்தார்.
         அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளிவைக்கக் கோரி கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
         நீதிபதிகள் எஸ்.யூ. கான், சுதிர் அகர்வால், டி.வி. சர்மா ஆகியோர் அடங்கிய குழு, செப்டம்பர் 30-ம் தேதி மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பணி அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment