Tuesday, September 14, 2010

online tamil news

பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து
 
        பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களால் குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
        அமெரிக்க மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகுறிபில் தெரிவித்திருப்பதாவது: அனைத்து குளிர் பானங்களிலும் காபின் எனப்படும் சுவை கூட்டும் பொருளை சேர்ப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. காபின் கலந்த குளிர்பானம் ஒன்றை தொடர்ந்து இரண்டு தடைவ அருந்தினால் அவை ஐந்து காபி குடித்ததற்கு சமம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 
       இந்த சோதனைக்காக 19 வயதுக்குட் பட்ட வர்களைஆராய்ந்த போது குளிர்பானம் குடிப்பதற்கு முன்னர் இருதயதுடிப்பு அரைமணி நேரத்தில் 82 ஆக இருந்தது. அதேசமயம் குளிர்பானம் குடித்தபின்னர் 106 ஆக அதிகரித்து காணப்பட்டது.தினமும் இரண்டு பாட்டில் குளிர்பானம் குடித்து வரும் குழந்தைகளின் எடை 30 கிலோ வரை குறையும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் டாக்டர்கள்.

No comments:

Post a Comment